உறவினர்கள் இடையேயான தகராறு கொலையில் முடிந்த சோகம்
வவுனியா மாவட்டம் ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 32 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் கடந்த 06.06.2026 இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் நாவற்குளம், ஓமந்தை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்தவரின் தாயாருக்கும் உறவினர்கள் குழுவொன்றுக்கும் இடையில் நாவற்குளம் கோவிலுக்கு அருகில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த பிரச்சினையை சமரசப்படுத்த முயன்றபோது, உறவினர்கள் குழுவில் இருந்த ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் சடல அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடும்பத் தகராறு ஒரு உயிரைப் பறித்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.