11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – முன்னாள் கடற்படைத் தளபதிக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!

Author
0
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற்போனதாகக் கூறப்படும் வழக்கில், சந்தேகநபர் ஒருவருக்குத் தலைமறைவாக இருக்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு இன்று (22) கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் கடற்படைத் தளபதியை தலா ரூ.10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், இந்தப் பிணை கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 27ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கடந்த ஜூன் 10ஆம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இன்றைய பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top