2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டை (NIC) தொடர்பான பிரச்சினைக்கு இலங்கை பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேவையான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தமது தாய் அல்லது தந்தையின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி இணையவழியில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் காலம் எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது. எனவே, இறுதி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
