
மன்னார் மருதமடு அன்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணி மாதத் திருவிழா, நேற்று (06) மாலை கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமானது.

மாலை 5.30 மணியளவில், மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் திருவிழா கொடியேற்றப்பட்டது.

இந்நிகழ்வில்,
மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார்
மறைமாவட்ட குருமார்கள்
திரளான பக்தர்கள்
ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் ஆரம்பமாகியுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மருதமடு திருத்தலத்திற்கு வருகை தந்து வருகின்றனர்.

திருவிழா நிகழ்வுகள்:

ஆகஸ்ட் 14 – மாலை வேஸ்பர் ஆராதனை

ஆகஸ்ட் 15 – காலை 6.15 மணி, மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் ஏனைய மறைமாவட்ட ஆயர்களுடன் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறவுள்ளது.