ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்எஸ் அப்துல் வாஸித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆசன வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது
எம்எஸ் அப்துல் வாஸித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக சமர்ப்பித்த கடிதத்திற்கு அமைவாக அவரது பதவி விலகல் செப்டம்பர் ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது என்றும் பதில் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்
இதன்படி ஆம் ஆண்டின் ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் ஆம் பிரிவுக்கு அமைவாக பத்தாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவி வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

