4 மாவட்டங்களை துரத்தும் "ரெட் அலர்ட்

keerthi
0


 வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது…

* நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது. 

* தென்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும். 

* நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளையும் கனமழை நீடிக்கும். 

* தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

* தற்போதைய மழைக்கான காரணம் மேகவெடிப்பு இல்லை.

* வளிமண்டல சுழற்சியில் இதுவரை இந்த அளவிற்கு மழை பெய்தது இல்லை. 

* 90 சதவீதம் மழை பெய்யும் என்று குறிப்பிட்டு சொல்ல இயலாது. 

* ரெட் அலர்டுக்கு மேலான எச்சரிக்கை என்று எதுவும் இல்லை. 

* வரும் காலங்களில் கனமழை அடிக்கடி பெய்யும்.

* கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு பாளையங்கோட்டையில் அதி கனமழை பெய்துள்ளது. 

* வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட 5 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top