யாழில். கைக்குண்டுடன் இளைஞன் கைது..!!

tubetamil
0

 யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் கைக்குண்டுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்   ஞாயிற்றுக்கிழமை (14) பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது , வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இளைஞனை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.இதன்போது , இளைஞனின் உடைமையில் இருந்து கைக்குண்டை மீட்டுள்ளனர். 

அதனை தொடர்ந்து இளைஞனை கைது செய்த பொலிஸார் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , திருட்டு சம்பவங்கள் சிலவற்றுடன் இளைஞனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

தொடர்ந்தும் இளைஞனை பொலிஸ் காவலில் வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top