உலக்கையால் தாக்கியதில் உலகை விட்டு பிரிந்தார்..!!

tubetamil
0

 வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்புணர முயற்சி செய்வதற்கு முயற்சித்த வேளையில், வீட்டிலிருந்த உலக்கையால் அப்பெண் தாக்கியதில் சந்தேகநபர் மரணமடைந்த சம்பவமொன்று அங்கொட - அளுத்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்றபோது, அப்பெண்ணின் கணவரும் வீட்டில் இருந்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது

அளுத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது தாக்கியதாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த அங்கொட பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top