இளம் பெண்களுடன் சுற்றுலா சென்ற பிக்கு! விரட்டியடித்த பொதுமக்கள்

keerthi
0


 காவியுடை களைந்து இளம்பெண்களுடன் சுற்றுலா சென்றிருந்த பிக்கு ஒருவர் அவர் தங்கியிருந்த விகாரையில் இருந்து பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் தர்கா டவுண் அருகே உள்ள வெலிப்பன்னை பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு     குறித்த பிக்கு, தனது காவியுடைகளைத் தவிர்த்து சாதாரண உடையில் இளம் பெண்கள் மூவருடன் சுற்றுலா சென்றிருந்த போது அவர் பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 எனினும்    குறித்த பிக்கு சாதாரண ஆடையில் திஸ்ஸமஹாராம பிரதேசத்துக்கு மூன்று யுவதிகளுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

இதன்போது அவர் தங்கியிருந்த விகாரை அமைந்துள்ள இடத்திலுள்ள பிரதேசவாசிகளில் சிலர் தற்செயலாக அங்கு சென்றிருந்த சமயத்தில் பிக்குவைக் கண்டுள்ளனர்.

இதன்போது அவரையும் அவருடன் வந்திருந்த யுவதிகளையும் காணொளி எடுத்து ஏனைய கிராம வாசிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் சுற்றுலா முடிந்து திரும்பி வந்த பிக்கு, பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தங்கியிருந்த விகாரையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top