சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்லப்பட்ட 323 கையடக்கத்
தொலைபேசிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றைய தினம் (03) கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் குறித்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கையடக்கத் தொலைபேசிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் கொழும்பு -கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.இதேவேளை புதிய 246 பயன்படுத்தப்படாத கையடக்கத் தொலைபேசிகளும், வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் 77 கையடக்கத் தொலைபேசிகளும் இந்தக் கைத்தொலைபேசிகளில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கொழும்பு -12 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரும், வத்தளை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு இந்தக் கைத்தொலைபேசிகளை எடுத்துச் செல்லும் போது, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசிகள், சட்டவிரோதமான முறையில் எடுத்துச் சென்ற இருவர் மற்றும் அவற்றை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய வேன் என்பன மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.