நீர்வேலி வடக்கு பகுதியில் இருந்து காணாமல் போன இளைஞனின் சடலம் கிணற்றில் கண்டுபிடிப்பு..!

tubetamil
0

நீர்வேலியில் உள்ள கிணறு ஒன்றில் இனைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக்க தெரிய வந்துள்ளது.



நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த சோதிலிங்கம் மிதுர்சன் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞனை காணவில்லை என உறவினர்கள் தேடியபோதே அவரது சடலம் கிணறு ஒன்றிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்லதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top