நேபாளத்தில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது
4.8 மெக்னிடியூட் அளவில் இந்நில அதிர்வு பதிவானதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு 7.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் நில அதிர்வுகளால் சுமார் 9,000 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.