இந்த ஆண்டு 340,000 இலங்கை குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவிக்கையில், கடந்த 2024 ஆம் ஆண்டில் 311,000 இலங்கை குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்பபட்டது.எனினும் : இந்த ஆண்டு 340,000 இலங்கை குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 12% அதிகமாகும்.என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் மேலும் தெரிவிக்கையில், . இந்த ஆண்டு, சில நிறுவனங்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக, விதிமுறைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி, வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக மக்களை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது."
மேலும், "இது எதிர்பார்க்கப்படும் இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு ஒரு முக்கியமான வாய்ப்பாகும்" என்று அவர் கூறினார்.
குறித்த இதேவேளை தற்போது இலங்கையர்களுக்கு புதிய வாழ்க்கை அமைப்பை உருவாக்கும் முக்கியமான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.