இலங்கையில் ஹிந்தி மொழி கல்வி மேம்பாட்டுக்காக திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி முறையில் ஹிந்தி சான்றிதழ் கற்கை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம்,உலக ஹிந்தி தினத்தின் 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார மையத்தில் பரத-இலங்கை ஹிந்தி சம்மேளனத்தில் இந்த திறக்கப்பட்டது.
இந்த திட்டம், பல்கலைக்கழக மையங்களின் மூலமாக இலங்கையின் அனைத்து பிராந்தியங்களிலும் ஹிந்தி மொழி கற்றலை எளிதாக்கும் நோக்கத்துடன் செயல்படும்.
இந்த புதிய கற்கை நெறியின் ஆரம்பம், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, இலங்கை கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணையத் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி.எம்.சி. திலகரத்ன ஆகியோரால் ஒழுங்கமைக்கப்பட்டது.
இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக ஹிந்தி தினத்தைக் கொண்டாடும் நிகழ்வில், இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட அறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். உலக ஹிந்தி தினம், 1949 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் ஹிந்தி மொழி முதன்முதலாக பேசப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 10 அன்று கொண்டாடப்படுகிறது.
இந்த புதிய திட்டம், இலங்கையில் ஹிந்தி மொழி மற்றும் அதன் பண்பாட்டு முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.