நாட்டில் தேங்காய் பற்றாக்குறை – விமல் வீரவன்ச அதிரடி குற்றச்சாட்டு!

tubetamil
0

 நாட்டில் நிலவி வரும் தேங்காய் பற்றாக்குறை தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை  முன்வைத்துள்ளார். மேல் மாகாண ஆளுனரது நிறுவனமான எக்ஸ்போ லங்கா தேங்காய் ஏற்றுமதி செய்வதாகவும், இதனால் தேங்காய் பற்றாக்குறை தீவிரமாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




இது குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் பேசிய விமல் வீரவன்ச, மேல் மாகாண ஆளுனருக்கு சொந்தமான எக்ஸ்போ லங்கா நிறுவனம் தேங்காய்களை அதிகளவில் ஏற்றுமதி செய்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு உருவாகியுள்ளதுடன், மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


மேலும், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் டுபாயில் உள்ள வங்கியொன்றில் வைப்புச் செய்யப்படுவதாகவும், அந்தப் பணம் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக நாட்டின் பொருளாதார நிலை மேலும் பாதிக்கப்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.


அத்துடன், தற்போது அரிசி மட்டுமன்றி தேங்காயையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளதையும் அவர் கவலை தெரிவித்தார்.


குறித்த இதேவேளை தேங்காய் பற்றாக்குறை காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கையில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காணவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. அத்துடன் தேங்காய் ஏற்றுமதி தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தொடர்ந்தும் அரசாங்கத்திடம் விளக்கம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 




கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top