வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அலட்சியமான போக்கு – மக்கள் உயிருக்கு ஆபத்து!

tubetamil
0

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அசமந்த போக்கு காரணமாக, யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள ஆவரங்கால் சந்திப் பகுதி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இருட்டில் மூழ்கியுள்ளது. செயலிழந்த தெரு விளக்குகள், பகல் நேரத்திலும் கூட பயணிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன.



குறித்த பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி வீதி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. தெரு விளக்குகளின் பழுது பற்றிய புகார்கள் பலமுறை பிரதேச சபைக்கு தெரிவிக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.


தெரு விளக்குகள் செயலிழந்ததன் விளைவாக, கடந்த வாரம் இரவு நேரத்தில் நடந்து சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை மோட்டார் சைக்கிள் மோதியதில், அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்த விபத்து பிரதேச மக்களின் கோபத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளது.


இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேச சபை உடனடியாக நடவடிக்கை எடுத்து, தெரு விளக்குகளை பழுதுபார்த்தே ஆக வேண்டும். இது போன்ற அலட்சியத்தால் இன்னும் உயிரிழப்புகள் ஏற்படாதிருக்க, பொதுமக்கள் உரியவர்களை எதிர்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top