உ ள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்த நிலையில் இது தொடர்பான வர்த்தமானி அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மேலதிக தேர்தல் ஆணையாளர் M.M.S.K.பண்டார மாபா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மார்ச் 20ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பின்னர் நடைபெறும் வேட்மனுக்களை ஏற்றுக்கொள்ளும் கூட்டத்தில் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.