இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை..!
தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்னும் 2 வாரங்களில் வெளியிடப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஜூலை மாத முதல் வாரத்தில் புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் புதிய அரசாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், பல நாட்கள் விவாதங்கள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்களும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
