நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும் என்றும், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கான அரசமைப்பு சார்ந்த உரிமைகள் உறுதியாகப் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
மேலும், புதிய அரசமைப்பு உருவாக்கம் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் விரிவான செயல்முறையாக இருக்கும் என்றும், அதற்கான காலவரைவு தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
