உலகமே உற்றுநோக்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சீனப் பயணத்தில், முதலாவது நாளிலேயே அதிரடிப் புயல் வீசத் தொடங்கியுள்ளது! பீஜிங்கில் உள்ள 'Great Hall of the People' மண்டபத்தில், சுமார் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் மூடிய அறைக்குள் நடந்த இந்த ரகசியப் பேச்சுவார்த்தையில் பெரும் விவாதங்கள் வெடித்துள்ளன!
"நெருப்பும் தண்ணீரும் ஒன்றாகச் சேர முடியாது!" 
வர்த்தகம் மற்றும் ஈரான் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் பேசினாலும், தாய்வான் விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மிகவும் கடுமையான வார்த்தைகளால் ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். "தாய்வான் விவகாரத்தை அமெரிக்கா சரியாகக் கையாள்லையென்றால், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதல்களும், பெரும் யுத்தமும் வெடிக்கும். இதனால் இரு நாடுகளின் ஒட்டுமொத்த உறவும் சீர்குலையும்" என சீனா மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது! 

மறுபுறம், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக நடந்துள்ளதாகவும், "வர்த்தகப் போரில் யாருக்கும் வெற்றியிருக்காது" என்றும் சீனா கூறியுள்ளது. இந்தச் சந்திப்பில் எலோன் மஸ்க் (Tesla), ஜென்சன் ஹுவாங் (Nvidia), டிம் குக் (Apple) போன்ற அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் (CEOs) கலந்துகொண்டு ஜி ஜின்பிங்கைச் சந்தித்துள்ளனர். ட்ரம்பும் இந்தச் சந்திப்பு 'மிகவும் அற்புதம்' எனக் கூறினாலும், தாய்வான் விவகாரம் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது! 

ஈரான் போருக்கு சீனாவின் உதவியை அமெரிக்கா நாடும் அதேவேளை, தாய்வான் விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குமா? அல்லது ட்ரம்பின் புதிய காய்நகர்த்தல் என்னவாக இருக்கும்? 

சீன அதிபரின் இந்த அதிரடி எச்சரிக்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ட்ரம்ப் இதற்கு எப்படிப் பதிலடி கொடுப்பார்? உங்களுடைய கருத்துக்களை கீழே COMMENT-இல் பதிவிடுங்கள்! மறக்காமல் இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க! 

நன்றி வணக்கம்.
