மே 2: "ஈரான் விவகாரத்தில் வெடித்தது புதிய மோதல்!"
"எங்கள் விவகாரங்களில் தலையிட அமெரிக்காவிற்கு உரிமையில்லை! - 5 சீன நிறுவனங்கள் மீதான அமெரிக்கத் தடைகளை முடக்கிய சீன வர்த்தக அமைச்சகம்!"
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி 5 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை முறியடிக்கும் வகையில், சீனா ஒரு அதிரடியான தடையுத்தரவை பிறப்பித்துள்ளது! 


இந்தத் தடைகளைச் செயல்பட விடாமல் தடுக்கும் வகையில், சீன வர்த்தக அமைச்சகம் தற்போது அதிகாரப்பூர்வமாக ஒரு தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை "அதிகார வரம்பை மீறிய ஆதிக்கம்" என பெய்ஜிங் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஹெங்லி பெட்ரோகெமிக்கல் (டாலியன்) ரிஃபைனரி, ஷான்டாங் ஜின்செங் பெட்ரோகெமிக்கல் குரூப், ஹெபேய் சின்ஹாய் கெமிக்கல் குரூப், ஷௌகுவாங் லுகிங் பெட்ரோகெமிக்கல் மற்றும் ஷான்டாங் ஷெங்சிங் கெமிக்கல் ஆகிய 5 நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாகச் சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தடைகளை முறியடிக்கச் சீனா பிறப்பித்துள்ள இந்தத் தடையுத்தரவு, சர்வதேச வர்த்தகத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து உடனடியாகத் தெளிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
