வயலுக்குச் சென்ற விவசாயி யானை தாக்கி பலி!

Author
0

 அனுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று(30.04.2026) அதிகாலை 5 மணியளவில் மேற்படி விவசாயி தனது வயலில் வேலை செய்வதற்காகச் சென்றுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த காட்டு யானை ஒன்று எதிர்பாராத விதமாக அவரைத் தாக்கியுள்ளது.

அப்பகுதியில் பெரும் அச்சம்


யானையின் பலத்த தாக்குதலுக்குள்ளான அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.





இவ்வாறு உயிரிழந்தவர் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் எனவும், அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top