அரசாங்கம் கோடிக்கணக்கான பொது நிதியைத் தொடர்ந்து வீணடித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன குற்றம் சாட்டியுள்ளார்.
சிறுதவறுகள் என்ற பேரில் மழுப்பிவிட்டு அரசாங்கம் வேண்டுமென்றே அனைத்தையும் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
'இந்த அரசாங்கம் தவறுகளை மட்டுமே செய்து வருகிறது. ஜனாதிபதி, மன்னிப்பு வழங்கத் தகுதியற்ற ஒருவருக்கு அதை வழங்குகிறார்.
டொலரின் மதிப்பு உயர்ந்துள்ளது
தவறுதலாக 323 கொள்கலன்கள் விடுவிக்கப்படுகின்றன. தவறுதலாக, தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. தவறுதலாக, 2.5 மில்லியன் டொலர்கள் தவறான கணக்கில் செலுத்தப்படுகின்றன. தவறுதலாக, ஆறு இலட்சம் டொலர்கள் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு வழங்கப்படுகின்றன.
தவறுதலாக, ஒப்பந்ததாரர்களுக்கு 280 மில்லியன் ரூபாய் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) இருமுறை வழங்கப்படுகிறது. தவறுதலாக, 248 மில்லியன் ரூபாய்கள் இழப்பீடாக வழங்கப்படுகிறது.
தவறுதலாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 74,000 திர்ஹம்களை வழங்குகிறது. தவறுதலாக, சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 2.2 மில்லியன் இந்திய ரூபாய்க்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் போயுள்ளது.
தவறுதலாக, டெண்டர் செயல்முறையை மேற்கொள்ளாமல் அவர்கள் இ-பாஸ்போர்ட் முறையை வழங்குகிறார்கள், மேலும் இது குறித்து போலந்து புகார் அளித்துள்ளது.
குடிவரவுத் துறையில் தவறுதலாகக் கண்டறியப்பட்ட இந்த புதிய நடைமுறையால் நமக்கு 9.83 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவு என்ன? அதன் விளைவு என்னவென்றால், நீங்கள் இன்று செய்தித்தாள்களைப் படித்தால், கட்டுமானப் பொருட்களின் விலைகள் 25% அதிகரித்துள்ளன. மருந்துகள், தண்ணீர், இவை அனைத்தும் 50% அதிகரித்துள்ளன. 400 கிராம் பால் பவுடரின் விலை 50 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
மேலும், ஒரு கிலோகிராமின் விலை 125 ரூபாவினால் அதிகரித்துள்ளது. டொலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. இப்படித்தான் இந்த நாட்டில் இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
