யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடி பகுதியில் இன்று (31) மாலை இடம்பெற்ற விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்களின்படி, யாழ்ப்பாணம் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை துரத்திச் சென்றபோது, துரத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தொடர்பில்லாமல் பயணித்த மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் துரத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
