திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில், கழ்மலை பன்சலைக்கு அருகிலுள்ள பாறைக் குன்றுப் பகுதியில், காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் கைக்குண்டு ஒன்று நேற்று (28) கந்தளாய் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், குறித்த கைக்குண்டை பாதுகாப்பாக மீட்பதற்காக அப்பகுதியில் உடனடி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன், பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்வதற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைக்குண்டு மீட்கப்பட்ட பகுதியில் காலனித்துவ ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் பழமையான கட்டிட இடிபாடுகள் காணப்படுவதாகவும், கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் காலனித்துவ காலத்தில் சிறிய விமான தரையிறக்குத் தளம் இயங்கியிருந்ததாக உள்ளூர் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
