20 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு தங்கப் பதக்கம்! – ருமேஷ் தரங்கவின் வரலாற்றுச் சாதனை!

Author
0
இலங்கை தடகள வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கப்பட்டுள்ள நிலையில், கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
🎯 இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்ற போட்டியில், 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து ருமேஷ் தரங்க சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
🏆 இதன் மூலம், கொமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கத்திற்காக இலங்கை 20 ஆண்டுகளாகக் காத்திருந்த நீண்ட எதிர்பார்ப்பு நிறைவுக்கு வந்துள்ளது.
📌 கடந்த 2006 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற கொமன்வெல்த் போட்டியில் சிந்தன விதானகே பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்றதன் பின்னர், இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
🇱🇰 மேலும், கொமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் இலங்கை வென்ற 5ஆவது தங்கப் பதக்கமாகவும், சர்வதேச தடகள அரங்கில் நாட்டின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாகவும் இது பதிவாகியுள்ளது.
👏 ருமேஷ் தரங்கவுக்கு இலங்கையின் வாழ்த்துகள்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top