நீர்கொழும்பு கடற்பரப்பில் கடற்றொழில் படகுகள் விபத்து – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்!

Author
0
நீர்கொழும்பு அருகிலுள்ள கடற்பகுதியில் பல கடற்றொழில் படகுகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, கடற்றொழிலாளர்களை மீட்க இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
🚁 காணாமல் போனவர்களைத் தேடுவதற்காக விமானப்படைக்குச் சொந்தமான Bell 412 ரக உலங்கு வானூர்தியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் நேற்று (31) பிற்பகல் கடற்றொழிலுக்குச் சென்ற ஒரு சிறு படகு விபத்துக்குள்ளானது தெரியவந்தது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, மேலும் 3 கடற்றொழில் படகுகள் காணாமல் போயிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
⚫️ தற்போது, விபத்துக்குள்ளான படகுகளில் ஒன்றில் பயணித்த ஒரு கடற்றொழிலாளரின் சடலம் நீர்கொழும்பு கரையோரத்தில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதே படகில் இருந்த மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.
🚢 காணாமல் போன கடற்றொழிலாளர்கள் மற்றும் படகுகளைத் தேடும் பணியில் கடற்படைக் கப்பல், விசேட நீர்மூழ்கிக் குழு, விமானப்படை மற்றும் கடற்படை அணிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
🙏 காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டுமென அனைவரும் பிரார்த்திப்போம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top