பொன்சேகாவை இராணுவத்தினர் கைது செய்த போது அதே ஹோட்டலில் தங்கியிருந்த அநுர!

Author
0

 2010 ஜனாதிபதி தேர்தலின் போது ஒரே ஹோட்டலில் இருந்து தேர்தல் முடிவுகளை நானும் சரத் பொன்சேகாவும் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த ஹோட்டலை இராணுவத்தினர் சுற்றிவளைத்து, சரத் பொன்சேகாவை கைது செய்தனர் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நொச்சியாகம பகுதியில் நேற்றையதினம்(13) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஊழல்வாதிகளை கைது செய்யும் போது நான் அரசியல் பழிவாங்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர். யாரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்குக் கிடையாது..2010இல் நானும், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகாவும் ஒரே ஹோட்டலில் இருந்தவாறு தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்தோம்.

முடிவுகள் வெளியாகி முடிந்தவுடன் அந்த ஹோட்டலை இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். சரத் பொன்சேகாவும் அப்போதே கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்.

அப்போதைய அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டியதற்காக ஊடக நிறுவனம் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அரச அதிகாரிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பலர் நாட்டை விட்டுத் தப்பிச்சென்றனர். இதுதான் அரசியல் பழிவாங்கல் என குறிப்பிட்டுள்ளார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top