யாழ் - வல்வையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

tubetamil
0

 யாழ்ப்பாணம் - வல்வை பாலத்துக்கு அருகில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.



இந்த விபத்தானது  மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனம், முச்சக்கரவண்டி என்பன மோதுண்ட நிலையில் ஏற்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


குறித்த இதே வேளை முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் பட்டா வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அத்துடன் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top