கனடாவில் தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகள் மாற்றப்பட்டு போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலைய ஊழியர்களின் உதவியுடன் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயணிகளின் சூட்கேஸில் உள்ள Tag ரகசியமாக அகற்றப்பட்டு, அதனை போதைப்பொருள் நிரப்பப்பட்ட வேறு பொதியில் ஒட்டுவதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி குறித்து அறியாத 17 பயணிகள் பல்வேறு நாடுகளில் சட்ட சிக்கல்களில் மாட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலட்சியம் ஒரு பெரிய சட்ட சிக்கலாக மாறலாம்..! 
