பண்டத்தரிப்பில் கோயில் திருவிழா பார்க்கச் சென்ற 157 பேருக்கு கண் பாதிப்பு!

Author
0
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் நேற்று (20.08.2026) இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது, அதிக ஒளிச்செறிவுடைய லேசர் விளக்குகள் மற்றும் அதிகளவிலான பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருவிழாவில் கலந்துகொண்ட 157 பேர் கண்களில் கடுமையான வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 👁️
மேலும் பலர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🏥 பாதிக்கப்பட்ட அனைவரும் தாமதமின்றி பரிசோதனை மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசேட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
⚠️ திருவிழாக்களில் அதிக ஒளிச்செறிவுடைய லேசர் விளக்குகள் மற்றும் பட்டாசுகளைப் பயன்படுத்தும்போது பொதுமக்களின் கண் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top