
நிலவும் சீரற்ற வானிலை தொடர்பாக நேற்று (05) அனர்த்த முகாமைத்துவ மையத்தில் நடைபெற்ற விசேட ஆலோசனைக் கூட்டத்தில், கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில்,
-

வளிமண்டலவியல் திணைக்களம்
-

தேசிய கட்டட ஆய்வு நிறுவனம்
-

நீர்ப்பாசனத் திணைக்களம்
-

பரீட்சைகள் திணைக்களம்
-

முப்படைகள்
-

பொலிஸார்
-

அனர்த்த முகாமைத்துவ மையத்துடன் இணைந்துள்ள பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள்
கலந்துகொண்டனர்.

முக்கிய தீர்மானங்கள்:

A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிட்ட கால அட்டவணையின்படி நடைபெறும்.

அடுத்த 3 நாட்களுக்குள் கடுமையான வானிலை ஏற்பட்டால், மீண்டும் விசேட ஆலோசனைக் கூட்டம் நடத்தி தேவையான தீர்மானங்கள் எடுக்கப்படும்.

வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக, இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு அருகில் பரீட்சை நிலையங்களை பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டால், தேவையான உதவிகளை வழங்க அனர்த்த முகாமைத்துவ மையம் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.