
செப்டம்பர் 28 முதல் ஒக்டோபர் 04, 2026 வரை

இலங்கையை செயற்கை நுண்ணறிவு (AI) மையமாக மாற்றும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக "Sri Lanka AI Week 2026" உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, GovTech Sri Lanka மற்றும் SLT-MOBITEL இணைந்து இந்த தேசிய நிகழ்வை ஏற்பாடு செய்கின்றன.

முக்கிய நோக்கங்கள்:

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை விரைவுபடுத்துதல்

AI ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவித்தல்

இலங்கையை பிராந்திய AI மையமாக உருவாக்குதல்

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன நிகழ்வின் உத்தியோகபூர்வ இணையதளத்தை அறிமுகப்படுத்தியதுடன், AI தீர்வுகளை உருவாக்கும் நாடாக இலங்கை மாற வேண்டும் என வலியுறுத்தினார்.

"AI Amplified" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த வார நிகழ்வில்,

சர்வதேச AI மாநாடு

தொழில்நுட்பக் கண்காட்சி

AI புத்தாக்கங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான விருது வழங்கும் விழா
ஆகிய மூன்று பிரதான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

மேலும், 5 பில்லியன் அமெரிக்க டொலர் தொழில்நுட்ப ஏற்றுமதி இலக்கை அடைவதற்காக AI, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) திறன்களை வலுப்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.