மஹர சிறைச்சாலையை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையைச் சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை தொடர்ந்து அவதானித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
