அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் பலி!

Author
0
மொனராகலை – கும்புக்கன பகுதியில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
🚜 உழவு இயந்திரமும் டிப்பர் லொறியொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டிப்பர் லொறியில் பயணித்த 10 பேரில் எட்டு பேர் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
🕯 உயிரிழந்தவர்கள் தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
உயிரிழந்தவர்களில் ஆர்.டி. ஷெஹான் எரங்க (20), நிரோஷன் தேவேந்திர (55), ஏ.எம். திலகரத்ன பண்டார (56), பசிந்து தினேஷ் (21) மற்றும் தாரக மதுஷான் (31) ஆகியோர் அடங்குகின்றனர்.
💔 இதில் ஏ.எம். திலகரத்ன பண்டார (56) மற்றும் பசிந்து தினேஷ் (21) ஆகியோர் தந்தை மற்றும் மகன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🙏 பூஜை வழிபாட்டிற்காக குடும்பமாக டிப்பர் லொறியில் பயணித்தபோதே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
⚖️ விபத்துக்குள்ளான டிப்பர் லொறியின் சாரதி மற்றும் பயணிகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top